தமிழ்நாடு (Tamil Nadu)

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் பூண்டு விலை உயர்வு

Published On 2023-12-23 08:59 GMT   |   Update On 2023-12-23 08:59 GMT
  • கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயர்ந்து உள்ளது.
  • பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை:

பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.350 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150 உயர்ந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து குறைந்து விட்டதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

வெங்காயம்-ரூ.28, தக்காளி-ரூ.20, உருளைகிழங்கு ரூ.27, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.40, பீன்ஸ்-ரூ.35, பீட்ரூட்ரூ.45, முட்டைகோஸ்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.50, காராமணி-ரூ.50, பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40.

Tags:    

Similar News