தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பு... எச்.ராஜா

Published On 2024-09-07 04:07 GMT   |   Update On 2024-09-07 04:07 GMT
  • கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும்.

திருச்சி:

திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கோவிலுக்கு தமிழக பாஜகவை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வந்தார்.

சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சோ்ந்து கொள்வதாக முன்னாள் தலைமைச்செயலர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது, பின் வாங்குகின்றனா்.

பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தில் இணைந்தால்தான் மத்திய அரசால் நிதி வழங்க முடியும்.

கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனை விவகாரத்தில் அத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும். தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பான சூழல் இருப்பதை காண முடிகிறது. தி.மு.க. கூட்டணியில் எது நடந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு தேவையற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை திட்டங்களையும், பா.ஜ.க. தொண்டர்களையும் நம்பியே நாங்கள் தோ்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து எப்போதும் நான் கருத்து கூறுவது இல்லை என்றார்.

Tags:    

Similar News