தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராய மரண வழக்கு... 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

Published On 2024-10-01 14:06 GMT   |   Update On 2024-10-01 14:06 GMT
  • கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
  • இரண்டாவது முறையாக ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரி சடையன், வேலு, கெளதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சடையன், கெளதம் மற்றும் ஜெயின் ஆகிய 3 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிபிசிஐடி விசாரணை நடந்துவருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News