தமிழ்நாடு (Tamil Nadu)

குறையத் தொடங்கிய மழை.. சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் வடிந்தது

Published On 2024-10-16 02:56 GMT   |   Update On 2024-10-16 02:56 GMT
  • மழை குறைந்ததால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது.
  • சில பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது.

இதனிடையே நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடிந்துள்ளது.

ஸ்டீபன்சன் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் வடியவில்லை.

இன்று காலை வரை CB சாலை சுரங்கப்பாதை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, MRTS சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News