தமிழ்நாடு

மெட்ரோ ரெயிலில் விம்கோ நகருக்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு...

Published On 2023-11-06 06:56 GMT   |   Update On 2023-11-06 06:56 GMT
  • பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
  • தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

சென்னை:

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது

நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

நீலவழித்தடத்தில் சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி- டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.

விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரிசெய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News