தமிழ்நாடு (Tamil Nadu)

ஓ.பன்னீர்செல்வம் 23-ந்தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை- தனியாக வேட்பாளரை அறிவிப்பாரா?

Published On 2023-01-19 05:05 GMT   |   Update On 2023-01-19 05:05 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்படுகின்றன.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

சென்னை:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 23-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளார். எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.

தலைமை நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களும், 87 மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கட்சியின் பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்படுகின்றன. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது எத்தகைய முடிவை மேற்கொண்டால் சாதகமாக இருக்கும்.

இரு அணிகளாக பிரிந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் பட்சத்தில் போட்டியாக வேட்பாளரை நிறுத்தலாமா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கேட்கிறார்.

தனியாக வேட்பாளரை நிறுத்தினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார்.

உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அக்கூட்டத்தில் அவரது சார்பாக 2 பேர் சமீபத்தில் பங்கேற்று வந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News