தமிழ்நாடு

அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா - 106 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி

Published On 2024-07-12 06:39 GMT   |   Update On 2024-07-12 06:39 GMT
  • டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
  • மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் விதவிதமாக நடந்து வருகிறது. மோசடி குறித்து போலீசார் தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்கள் வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படி ஒரு மோசடி சம்பவம் குறித்து மதுரை விமான நிலையத்தில் தெரியவந்துள்ளது. ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 106 பேரிடம் தலா ரூ.29 ஆயிரம் வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது.

அயோத்தி செல்ல மதுரை விமான நிலையம் வந்தவர்களிடம், டிக்கெட் எதுவும் புக் செய்யப்படவில்லை என இண்டிகோ ஊழியர்கள் கூறியதால் ஆன்மிக சுற்றுலா செல்ல வந்தவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ரூ.26 லட்சத்திற்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News