எல்லாம் மேலிருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள்
- எல்லோரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
- 3 வடிவமைப்புகள் தயாராகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் மாநாடு அடுத்தடுத்து தள்ளிப்போன நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்த போது காங்கிரஸ் தலைவர் கார்கே மு.க.ஸ்டாலின் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து 'ஜனவரி 26' என்று தேதி குறித்தார்களாம். எல்லோரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
எனவே மாநாட்டை தேசிய அளவில் திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
மாநாட்டு மேடை, பந்தலில் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் அமர தனித்தனி இட வசதி எல்லாவற்றையும் பிரமிக்க தக்க வகையில் வடிவமைக்க சொல்லி உள்ளாராம். 3 வடிவமைப்புகள் தயாராகி வருகிறது. 2-ந் தேதிக்குள் முடிவாகி விடும் என்கிறார்கள். விரைவில் தொகுதி பங்கீடு பேச்சு நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லி தலைவர்களும் கை கோர்ப்பதால் மேலே இருப்பவர்களும் பார்த்து கொள்வார்கள் என்று உற்சாகமாக இருக்கிறாராம்.