தமிழ்நாடு (Tamil Nadu)

குற்றால அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர்- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

Published On 2024-05-28 06:28 GMT   |   Update On 2024-05-28 06:28 GMT
  • பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
  • இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முக்கிய சுற்றுலாதளமான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலத்தில் பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது.

இன்று காலையில் குற்றாலம் ஐந்தருவியல் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News