தமிழ்நாடு

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட காரணம் என்ன? அருள்வாக்கு கூறிய சாமியார்

Published On 2024-08-03 06:47 GMT   |   Update On 2024-08-03 07:39 GMT
  • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
  • விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News