தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக மாநாடு: நிபந்தனைகள் விதித்த காவல்துறை

Published On 2024-09-08 11:48 GMT   |   Update On 2024-09-08 11:48 GMT
  • நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.
  • குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற காவல் துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநாடு நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட மாநாடு சம்பந்தப்பட்ட இடங்களின் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-

மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் மாநாட்டில் பங்கேற்க தொண்பர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்? எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

த.வெ.க நிர்வாகிகள் அளித்த கணக்குப்படி, வாகனங்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே வர முடியும். ஆனால், 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள். மீதி வருபவர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர நெரிசல் இல்லாமல் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

நடிகர் விஜய் விருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.

மாநாடு நடத்தப்படும் இடம் அருகில் உள்ள கிணறுகள் மூடப்பட வேண்டும்.

மின் ஒயர்கள் செல்லும் வழியில் நாற்காலிகள் போடாமல் தவிர்ப்பது நல்லது.

மாநாடு மேடையின் அளவு என்ன ? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள் என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாநாடு நடக்கும் பகுதியில் பட்டாசு வெடித்தல் வாண வேடிக்கை உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும்.

விஐபி பாஸ் வழங்கப்படும் விவரங்கள் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மாநாடு முழுவதும், பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News