தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்கவே அமெரிக்கா செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-27 15:40 GMT   |   Update On 2024-08-27 15:40 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
  • முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.

சென்னை:

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை ஈர்க்க உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.

ரூ.3,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இதனால் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் துரித கதியில் செயல்பட்டு வருகின்றன.

ரூ.9,99, 093 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.

கடந்த 21-ம் தேதி நடைபெற்ற மூதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நிறுவன திட்டங்களை தொடங்கி வைத்தேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News