தமிழ்நாடு (Tamil Nadu)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு

Published On 2024-09-23 16:54 GMT   |   Update On 2024-09-23 16:54 GMT
  • டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
  • வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

இந்நிலையில், இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிட்டது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகள் சரியான விடை 'டிக்' குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.

உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும். தபால் வழியாகவோ, இ-மெயில் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

பொது ஆங்கிலத்தில் வினா எண்கள் 177 முதல் 181 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள், வினா எண் 177-க்கு மேல கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News