தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2024-09-25 01:55 GMT   |   Update On 2024-09-25 01:55 GMT
  • சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
  • சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னை:

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, வில்லிவாக்கத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் சாலை, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராக வன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டி தங்கம்மாள் தெரு, ஏ.இ.கோவில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்த வாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத்தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோவில் தெரு.

கோயம்பேடு: சீனிவாச நகர், பக்தவச்சலம் தெரு, சேமந்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், சின்மையா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர்.

வில்லிவாக்கம்: சிட்கோ நகர் 1 முதல் 10-வது பிளாக், அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழிற்பேட்டை, திருநகர், வில்லிவாக்கம் சுற்றுப்பகுதி, பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News