தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2024-09-13 09:16 GMT   |   Update On 2024-09-13 09:16 GMT
  • குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனா்.
  • தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவா்கள் வருவதற்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 2763 தேர்வு மையங்களும் பள்ளிக்கூடங்கள் ஆகும்.

இதனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News