தமிழ்நாடு

சீமான் சர்ச்சை பேச்சுக்கு திருச்சி எஸ்.பி., கண்டனம்

Published On 2024-08-04 15:01 GMT   |   Update On 2024-08-04 15:01 GMT
  • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு, திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான், காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட எஸ்.பி., தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன்.

பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News