தமிழ்நாடு

ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ- திருப்பதி விரையும் டிடிஎஃப் வாசனின் வழங்கறிஞர்கள்

Published On 2024-07-15 13:11 GMT   |   Update On 2024-07-15 13:11 GMT
  • டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிராங்க் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிடிஎஃப் வாசன் மீது வழக்கு எண் 72/2024 பிரிவு 299 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.

டிடிஎஃப் வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் திருப்பதி விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News