தமிழ்நாடு

திமுகவினருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து மட்டன் பிரியாணி அனுப்பிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

Published On 2024-06-10 12:59 GMT   |   Update On 2024-06-10 12:59 GMT
  • கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
  • சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது...

கோவை தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தேர்தல் பணி ஆற்றும் திமுகவினருக்கு பிரியாணி வழங்குவதாக கோவை தொகுதியின் பொறுப்பாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா வாக்குறுதி அளித்திருந்தார்.

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

அதன் அடிப்படையில் கோவையில் தேர்தல் பணி ஆற்றிய திமுகவினரின் முகவரிக்கு இன்று ஆன்லைனில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

அதை தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்து அமைச்சருக்கு திமுகவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News