தமிழ்நாடு (Tamil Nadu)

கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த மேற்குவங்க பயங்கரவாதி அதிரடி கைது

Published On 2024-06-28 10:20 GMT   |   Update On 2024-06-28 10:35 GMT
  • கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த அனோவர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் அனோவர் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ஹபிபுல்லா கொடுத்த தகவலின் பெயரில் கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொகுக்க நினைத்தல் அல்லது தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்குவங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு வளாகம் அருகே கட்டுமான இடத்தில் பணிபுரிந்து வந்த அனோவரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர்.

"அன்சார் அல் இஸ்லாம்" அமைப்பு அல்கொய்தா, வங்காளதேசம் நாட்டிற்கு ஆதரவாக உள்ள இயக்கமாக செயல்பட்டு வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News