தமிழ்நாடு

சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்

Published On 2024-02-12 08:50 GMT   |   Update On 2024-02-12 08:50 GMT
  • கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
  • உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

சென்னை:

சட்டசபை விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* அரசின் உரை தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தது.

* தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக முன்கூட்டியே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

* கவர்னர் உரை என்பது அரசின் கொள்கை, சாதனைகளாக இருக்க வேண்டும். அரசியல் கருத்தாகவோ தவறாகவோ இருக்க கூடாது.

* கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.

* அரசிடம் இருந்து கவர்னர் உரைக்கான அறிக்கையானது பிப்.9-ந்தேதி கிடைத்தது.

* உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன.

* தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

* சட்டசபையில் முதல்வர், சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு திருக்குறளையும் கவர்னர் வாசித்தார்.

* அவைக்கு மரியாதை அளித்ததோடு, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

* அரசியலமைப்பு சட்டப்படி அதற்கு மேலாக, கவர்னரால் உரையை வாசிக்க முடியவில்லை.

* உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

* சபாநாயகர் தனது உரையை முடித்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும் என கவர்னர் எழுந்தார்.

* ஆனால் அவை நடவடிக்கைக்கு மாறாக கோட்சே உள்ளிட்ட பெயர்களை சபாநாயகர் வாசிக்க தொடங்கினார்.

* சபாநாயகரின் பேச்சானது அவரின் பதவியின் மாண்புக்கும், அவை மரபுக்கும் பொருத்தமானதாக இல்லை.

* சபாநாயகரின் செயல்பாடு, அவையின் மாண்பை குறைத்துவிட்டது.

* அவை மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் கவர்னர் வெளியேறினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News