தமிழ்நாடு (Tamil Nadu)
null

பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம்

Published On 2024-10-25 04:27 GMT   |   Update On 2024-10-25 04:28 GMT
  • சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
  • மழை காலம் தொடங்கியுள்ளதால் விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்பொழுது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திம்பம் மலைபாதை பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ரோட்டை கடப்பதும், சாலையோரம் நடமாடுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பண்ணாரி அம்மன்கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் திடீரென சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் சிறுத்தையை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது:- பண்ணாரி அருகே வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும், இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம், தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.

இதனால் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு எந்தவொரு தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News