தமிழ்நாடு (Tamil Nadu)

நாமக்கல்லில் கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Published On 2024-10-22 11:34 GMT   |   Update On 2024-10-22 11:34 GMT
  • நாமக்கல்ல் செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நாமக்கல்:

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய பஸ் நிலையம் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்றார். இதையடுத்து அங்கிருந்து காரில் நாமக்கல்லுக்கு சென்றார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செலம்பகவுண்டர் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News