உலகம் (World)

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்: வரும் 27-ம் தேதி தேர்தல்

Published On 2024-10-09 18:16 GMT   |   Update On 2024-10-09 18:16 GMT
  • 2021-ல் பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடா 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.
  • ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா வெற்றி பெற்று பதவியேற்றார்.

டோக்கியோ:

ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த புமியோ கிஷிடா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் அவர் சமீபத்தில் ராஜினாமா செய்தார். புமியோ கிஷிடா 2021-ல் பிரதமராக பொறுப்பேற்று, 3 ஆண்டுகளே பதவியில் இருந்தார்.

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவிக்கு, அதாவது கட்சி தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி நடந்தது. இதில் ஷிகெரு இஷிபா (67) வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

அப்போது, விரைவில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவுசெய்தார். வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டார். திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி தேர்தலை நடத்த தயாராகி வருகிறார்.

தற்போதைய ஆட்சிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற நாங்கள் நேர்மையாக செயல்படுவோம் என இஷிபா, தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரை பதவியில் இஷிபாவும், அவரது அமைச்சரவையும் பதவியில் நீடிப்பார்கள்.

அதேசமயம், அவசர அவசரமாக தேர்தலை நடத்தும் பிரதமரின் முடிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

Similar News