உலகம் (World)

யார் சாமி நீ... 18 ஆண்டுகளாக அண்டை வீட்டு மின் கட்டணத்தையும் செலுத்தி வந்த நபர்

Published On 2024-09-23 07:08 GMT   |   Update On 2024-09-23 07:08 GMT
  • வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார்.
  • அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு, வில்சனிடம் மன்னிப்பு கேட்டது.

அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் (Vacaville) என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி (Pacific Gas & Electric Company) (PG&E) வாடிக்கையாளர் கென் வில்சன் தனது மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். அதனால் அவர் தனது மின் நுகர்வை குறைக்க நடவடிக்கை எடுத்தார். அந்த முயற்சிகளால் மாற்றம் ஏற்படுத்தாததால், அவர் மேலும் விசாரிக்க முடிவு செய்தார்.

வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார். மேலும் அதன் பிரேக்கர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது மீட்டர் தொடர்ந்து இயங்குவதை கண்டுபிடித்தார். வில்சன் பின்னர் இந்த பிரச்சனை பற்றி பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியை தொடர்பு கொண்டு, ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அவர்களது விசாரணையில், வாடிக்கையாளரின் அபார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அபார்ட்மெண்டிற்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது, ஒருவேளை 2009-ம் ஆண்டு முதல் இருக்கலாம் என்று பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி தெரிவித்தது.

அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு வில்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

Tags:    

Similar News