உலகம்

பில் கேட்ஸ்-ஐ கிழித்தெடுத்த அமெரிக்க செய்தியாளர் - அவர் கூறியது என்ன தெரியுமா?

Published On 2024-08-04 02:47 GMT   |   Update On 2024-08-04 02:47 GMT
  • செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
  • இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இளம் இன்டர்ன்கள் (பயிற்சி பெறுபவர்) பில் கேட்ஸ்-ஐ தனிமையில் சந்திப்பதை தடை செய்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் நியூ யார்க் டைம்ஸ் செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.

"நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும், இளம் பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பது, அவர்களை இரவு உணவுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களை செய்ய பில் கேட்ஸ் ஒருபோதும் தவறியதே இல்லை," என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 


மைமக்ரோசாப்ட் மட்டுமின்றி இதே போக்கு மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷனிலும் தொடர்ந்தது என்று கூறப்படுகிறது. பவுன்டேஷனுக்கு வரும் இளம் இன்டர்ன்களிடம் பில் கேட்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார், இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.

கிட்டத்தட்ட இரண்டாவது மற்றும் மூன்றாம் கைக் கதைகள் மற்றும் அநாமதேய ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்த புத்தகத்தில், பல சந்தர்ப்பங்களில் எங்கள் அலுவலகம் ஆசிரியருக்கு வழங்கிய உண்மையான ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளைப் புறக்கணிக்கும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர், "இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியுள்ளது. இவை பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டாம்கட்ட மற்றும் மூன்றாம்கட்ட பெயர் அறியப்படாத ஆதாரங்களையே சார்ந்து இருக்கிறது," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News