உலகம்

செப்டம்பர் 26-ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றும் பிரதமர் மோடி

Published On 2024-07-17 01:55 GMT   |   Update On 2024-07-17 01:55 GMT
  • உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.
  • மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார்.

நியூயார்க்:

ஐ.நா. பொதுச்சபையில் 79-வது கூட்டம் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்று உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26-ம் தேதி ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News