உலகம் (World)

கடவுள் உதவியால் நாங்கள் வெல்வோம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு..!

Published On 2024-10-02 16:20 GMT   |   Update On 2024-10-02 16:20 GMT
  • கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்.
  • இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்.

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு முதல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவியுள்ளது.

அவற்றை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்து வரும் சூழலில் மக்கள் பாதுகாப்பு பங்கர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், "ஈரான் போர்க்குணமிக்க நாடு அல்ல, ஆனால் அது எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது என்பதை நேதன்யாகுவுக்கு தெரியப்படுத்துங்கள். இது எங்களது சக்தியின் ஒரு பகுதி மட்டும்தான். ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம்," என்று கூறி இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில், "இன்று லெபனானில் வீழ்ந்த எமது மாவீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து என் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடவுள் அவர்களின் இரத்தத்தை ஆசீர்வதிக்கட்டும். நம்மை அழிக்க முயற்சிக்கும், ஈரானின் தீய நிலைக்கோட்டிற்கு எதிராக கடுமையான போரின் மத்தியில் நாங்கள் இருக்கிறோம்."

"இது நடக்காது - ஏனென்றால் நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால் - நாங்கள் ஒன்றாக வெல்வோம். நாங்கள் தெற்கில் கடத்தப்பட்டவர்களையும், வடக்கில் உள்ள எங்கள் குடியிருப்பாளர்களையும் திருப்பித் தருவோம். இஸ்ரேலின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News