உலகம்

வங்கதேச இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்ப்பு

Published On 2024-08-16 16:10 GMT   |   Update On 2024-08-16 16:10 GMT
  • முகமது யூனுஸ் தலைமையில் ஆகஸ்ட் 8-ந்தேதி இடைக்கால அரசு பதவி ஏற்றது.
  • ஏற்கனவே 17 ஆலோசகர் இடம் பிடித்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் இடைக்கால அரசு அமைக்கப்படும் என வங்கதேச ராணுவம் தெரிவித்திருந்தது.

அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை ராணுவம் அமைத்தது. இடைக்கால அரசில் 17 ஆலோசகர் இடம் பிடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத், முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார், முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான், லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முகமது யூனுஸ் மற்றும் 13 ஆலோசகர்கள் ஆகஸ்ட் 8-ந்தேதி பதிவி ஏற்றனர். ஆகஸ்ட் 11-ந்தேதி இரண்டு பேர் பதிவி ஏற்றனர். அதற்கு அடுத்தநாள் ஒருவர் பதவி ஏற்றார்.

Tags:    

Similar News