புதுச்சேரி

தனியார் நிறுவன ஊழியர் மன்னிப்பு கேட்டதால் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த நீதிபதி

Published On 2023-11-25 03:40 GMT   |   Update On 2023-11-25 03:40 GMT
  • பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
  • வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர் உறவினர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

பின்னர் முருகன் தான் செய்த தவறை உணர்ந்து நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து குற்றவாளிகளுக்கான நன்னடத்தை கால சட்டம் 1958-ன் கீழ் தண்டனையை ரத்து செய்து முருகனை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News