டென்னிஸ்

மூன்றாம் நிலை வீரர் ரூப்லேவை வீழ்த்தி ஹாலே ஓபன் பட்டத்தை வென்றார் கஜகஸ்தான் வீரர்

Published On 2023-06-26 11:59 GMT   |   Update On 2023-06-26 11:59 GMT
  • முதல் செட்டை 6-3 என பூப்ளிக் கைப்பற்றினார்.
  • இரண்டாவது செட்டில் ரூப்லேவ் பதிலடி கொடுத்து 6-3 என கைப்பற்றினார்.

ஜெர்மனியில் ஆண்களுக்கான ஏடிபி ஹாலே டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3-ம் நிலை வீரரான ரூப்லேவ்-ஐ கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பூப்ளிக் எதிர்கொண்டார்.

இவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ வீழ்த்தி இருந்ததால் இறுதிப் போட்டியில் கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தனது திறமையான சர்வீஸ் மூலம் ரூப்லேவ்-ஐ திணறடித்தார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். ஆனால் அனுபவம் வாய்ந்த ரூப்லேவ் இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்து 6-3 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தினர்.

ஆனால் மூன்றாவது செட்டிலும் பூப்ளிக் ஆதிக்கம் செலுத்த அந்த செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

இதன் மூலம் ரூப்லேவ்-ஐ 6-3, 3-6, 6-3 என வீழ்த்தி பூப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News