டென்னிஸ்

சென்னையில் மூத்தோர் டென்னிஸ் போட்டி 11-ந்தேதி தொடக்கம்- பரிசு தொகை ரூ. 2.10 லட்சம்

Published On 2023-09-06 10:22 GMT   |   Update On 2023-09-06 10:22 GMT
  • 35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
  • முதல் முறையாக பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

சென்னை:

பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச மூத்தோர் (வெடன்ஸ்) ஐ.டி.எப். டென் னிஸ் போட்டி சென்னையில் வருகிற 11-ந்தேதி தொடங்கு கிறது. 16-ந்தேதி வரை பிரசி டென்சி கிளப் மற்றும் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடி யம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடைபெறுகிறது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கி றார்கள். இதுவரை 90-க் கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முதல் முறையாக பெண்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

சர்வதேச டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்தும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2.10 லட்சமாகும்.

மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் கே.சிவராம் செல் வக்குமார் போட்டி இயக்குனர் ஹிட்டன ஜோஷி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News