டென்னிஸ்

பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் சுமித் நாகல்

Published On 2024-07-28 13:10 GMT   |   Update On 2024-07-28 13:10 GMT
  • முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
  • பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் இன்று ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல்- பிரெஞ்சு வீரரான கொரெண்டின் மௌடெட் உடன் மோதினார்.

முதல் செட்டை இழந்த சுமித் நாகல், 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். யாரு வெற்றி பெறுவார் என்ற நிலையில் 3-வது சுற்று நடைபெற்றது. பரபரப்பாக சென்ற 3-வது செட்டை மௌடெட் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

இதனால் 6-2, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை மௌடெட் வீழ்த்தினார். இந்த ஆட்டம் இரண்டு மணி நேரம் 28 நிமிடங்களில் நடைபெற்றது. 

Tags:    

Similar News