டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷியா வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷிய வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார்.
இதில் அர்னால்டு 7-6 (8-6), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4-வது சுற்றில் அர்னால்டு, சிட்சிபாசை சந்திக்கிறார்.