search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய 20 வயது இலங்கை வீரர்
    X

    இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய 20 வயது இலங்கை வீரர்

    • கில் 19 ரன்னிலும் விராட் கோலி 3 ரன்னிலும் ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
    • கேஎல் ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர்.

    சுப்மன் கில் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும் அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர். 80 ரன்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 91 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து இஷான் கிஷன் - கேஎல் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெல்லாலகே அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட்டுகளை வெல்லாலகே கைப்பற்றியுள்ளார். வெல்லாலகே ஒரு 20 வயது வாலிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×