search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணிக்கு 2 உதவி பயிற்சியாளர்கள் ரெடி- கம்பீர்
    X

    இந்திய அணிக்கு 2 உதவி பயிற்சியாளர்கள் ரெடி- கம்பீர்

    • அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன்.
    • கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    டி20 உலகக்கோப்பை 2024 தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் அவரது பயிற்சி காலமும் தொடங்குகிறது. அதே சமயம் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் மற்ற பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்த கேள்வியானது எழுப்பட்டது.

    அந்த கேள்விக்கு கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    இலங்கை தொடர் உதவி ஊழியர்களின் முக்கிய அம்சமாக இருக்கும். நான் சொன்னது போல், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு அணியின் கூடுதல் பயிற்சியாளர் குறித்து முயற்சி செய்து முடிப்போம்.

    ஆனால், அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் இதில் கைதேர்ந்த வல்லுநர்கள். ரியான் மற்றும் அபிஷேக் வெற்றிகரமான நிலைப்பாட்டை பெற முடியும் என்று நம்புகிறேன். பயிற்சியாளர்களாக நாங்கள் வெற்றிகரமான பதவிக் காலத்தை பெற முடியும் என்று நம்புகிறோம்.

    பிசிசிஐ குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் எனது பெரும்பாலான கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். ஆனால் எனது பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்ததாக செய்திகள் வெளிவந்தது. இதை எல்லாம் படிக்கும் போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

    அபிஷேக், உதவி பயிற்சியாளராக, ரியான், துணை பயிற்சியாளராக பணியாற்றுகின்றனர். உதவி பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட துறையை விட மூன்று துறைகளிலும் கவனம் செலுத்த முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

    அதனால்தான் இப்போது இந்த இந்திய அணியில் இரண்டு உதவிப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் நாங்கள் எதிர்கொள்ள உள்ளோம். மேலும் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சரியான துணைப் பணியாளரை நாங்கள் தேர்வு செய்வோம்.

    என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×