search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பந்து வீச்சு தேர்வு- சூர்யகுமார் யாதவுக்கு இடம்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா பந்து வீச்சு தேர்வு- சூர்யகுமார் யாதவுக்கு இடம்

    • ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியை வழிநடத்துகிறார்.
    • அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக தொடக்க ஆட்டத்தில் மட்டும் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி.


    Next Story
    ×