search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பும்ரா பவுலிங் ஸ்டையில் 10-ம் நூற்றாண்டு சிற்பம்: ட்ரோல் செய்யப்படும் பாலிவுட் நடிகரின் டுவீட்
    X

    பும்ரா பவுலிங் ஸ்டையில் 10-ம் நூற்றாண்டு சிற்பம்: ட்ரோல் செய்யப்படும் பாலிவுட் நடிகரின் டுவீட்

    • கிரிக்கெட் போட்டி 19-வது நூற்றாண்டில் டெஸ்ட் வடிவில் சர்வதேச போட்டியாக மாறியது.
    • 16-வது நூற்றாண்டில் இங்கிலாந்தால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது.

    இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜேஸ்பிரிட் பும்ரா. யார்க்கர், ஸ்விங், பவுன்ஸ் என பந்து வீச்சில் கிங்-ஆக திகழ்கிறார். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ரித்தஷ் தேஷ்முக் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

    அந்த படம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஆகும் இந்த சிற்பத்தை பார்க்கும்போது பும்ரா பந்து வீசும் சைகை பிரதிபலிப்பது போல் உள்ளது.

    கிரிக்கெட் போட்டி 16-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 19-வது மற்றும் 20-வது நுற்றாண்டில் உலககளில் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டது. 19-வது நூற்றாண்டில் முதன்முறையாக டெஸ்ட் முறையில் கிரிக்கெட்டில் விளையாடப்பட்டது.

    ஆனால் 10-ம் நூற்றாண்டு படத்தை பதிவிட்டுள்ளதாக குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×