search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா: கண்கலங்கிய ரோகித்- வைரல் வீடியோ
    X

    இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா: கண்கலங்கிய ரோகித்- வைரல் வீடியோ

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் இறுதி போட்டியில் மோத போவது யார் என்ற நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்தை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவரில் 103 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அப்போது அந்த இடத்துக்கு வந்த விராட் கோலி, தோளில் தட்டிக் கொடுத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2019-ம் ஆண்டில் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்ததும் ரோகித் கண்கலங்கினார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டும் டி20 உலகக் கோப்பையிலும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் அவர் கண்கலங்கிய வீடியோ அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது. இவரது கேப்டன்சி சிறப்பானதாக உள்ளது என இவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×