என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
முன்னாள் கேப்டனை விட ரோகித் சிறப்பாக செயல்படுகிறார்- பாண்டிங் புகழாரம்
- ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கிறார்.
- இந்திய அணியை அழுத்தம் நெருங்க விடாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்.
புதுடெல்லி:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலியை விட கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
ரோகித் சர்மா மிகவும் அமைதியாக இருக்கிறார். குறிப்பாக பேட்டிங்கில் அழகாக விளையாடும் அவர் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிதானமாக இருக்கிறார். இந்திய அணியை அழுத்தம் நெருங்க விடாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார். ஏனெனில் அது தான் போட்டியின் மகத்தான தன்மையாகும்.
விராட் சற்று ஆக்ரோஷத்துடன் இருப்பவர். இருப்பினும் அதேபோன்ற குணம் கொண்ட ஒருவர் கேப்டன்ஷிப் அழுத்தத்தை சமாளிப்பதை சற்று கடினமாக கருதலாம். ஆனால் ரோகித் சர்மா அதில் நன்றாக இருக்கிறார். குறிப்பாக நல்ல மனிதராகவும் சிறந்த வீரராகவும் அவர் நீண்ட காலமாக இந்தியாவுக்கு செயல்பட்டு வருகிறார். தற்சமயத்தில் அவர் இந்தியாவின் கேப்டனாக சிறந்த வேலையை செய்து வருகிறார்" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்