search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கேட்ச் பிடிக்கல.. ரன் அவுட் பண்ணல.. ஆனா இவருக்குதான் சிறந்த பீல்டர் விருது.. வீடியோ
    X

    கேட்ச் பிடிக்கல.. ரன் அவுட் பண்ணல.. ஆனா இவருக்குதான் சிறந்த பீல்டர் விருது.. வீடியோ

    • தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியிலும் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறந்த கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்த வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை கேட்ச், ரன் அவுட் பிடிக்காத ரோகித்துக்கு வழக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் விருதை அறிவிக்கும் பீல்டிங் பயிற்சியாளர், இந்த முறையும் புதுவிதமாக விருதை அறிவித்தார். இந்த முறை நடமாடும் கேமரா மூலம் விருது வழங்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐய்யர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அந்த கேமரா இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து இறுதியில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து அவருக்கு கொடுத்தது. உடனே கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரோகித்தை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×