search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இதைதான் செய்ய வேண்டும் என்று முதலில் கூறியது டிராவிட் தான் - ரோகித் நெகிழ்ச்சி
    X

    இதைதான் செய்ய வேண்டும் என்று முதலில் கூறியது டிராவிட் தான் - ரோகித் நெகிழ்ச்சி

    • என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல் ராகுல் டிராவிட்.
    • நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன்.

    நியூயார்க்:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த முயற்சித்தேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய முதல் சர்வதேச போட்டியில் ராகுல் டிராவிட்தான் கேப்டனாக இருந்தார். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு வீரராக அவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார் என்பதும், பல ஆண்டுகளாக அணிக்காக அவர் என்ன செய்துள்ளார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

    ஒரு அணியாக இதைதான் செய்ய வேண்டும் என என்னிடம் முதலில் கூறியது டிராவிட் தான். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வற்புறுத்தினேன்.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    இதுக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் , இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் நான் மீண்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

    Next Story
    ×