search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய டி20 அணி கேப்டனாகும் SKY
    X

    இந்திய டி20 அணி கேப்டனாகும் SKY

    • டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக செயல்பட்டார்.
    • இலங்கை தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், பின்னர் சூர்யகுமார் யாதவ் நிரந்தர கேப்டனாக நியமிக்க வாய்ப்பு.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20-யில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    இதனால் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 27-ந்தேதி விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால் இந்த தொடருக்காக அறிவிக்கப்படும் கேப்டன் 2026 உலகக் கோப்பை வரை நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இலங்கை டி20 தொடரில் விளையாடுகிறார். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஆனால் இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் சாத்தியமான கேப்டனாக இருக்கலாம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை மாற்றம் செய்யப்பட்ட திட்டம் குறித்து கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசியதாகவும், நீண்ட கால ஆப்சனை கருத்தில் கொண்டு ஸ்திரதன்மையை உறுதி செய்ய இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×