search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கோவை அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் அணி
    X

    கோவை அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் அணி

    • கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடிய கோபிநாத் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 11-வது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் -சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்து அந்த அணி தடுமாறியது. அதன்பின்னர் கோபிநாத் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த முருகன் அஸ்வின் 31 ரன்களும், பிரணவ் குமார் 34 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் சேலம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. கோவை அணி தரப்பில் அபிஷேக் தன்வர், பாலு சூர்யா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 147 ரன்கள் இலக்குடன் கோவை அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×