என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
உலகக்கோப்பைக்கு பிறகு டி20 போட்டியில் இருந்து கோலி ஓய்வு?
- 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
- அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் விராட் கோலியின் இடம் கேள்வி குறியாகவே இருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார்.
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 35 ரன் எடுத்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது அவரது ஆட்டம் முன்புபோல் அதிரடியாக இல்லை. இதனால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
தனது பேட்டிங்கை சீர் செய்ய அவர் ஏதாவது ஒரு வகையான போட்டியில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளது. 20 ஓவர் அதிரடியான ஆட்டம் என்பதால் அதில் இருந்து விலகலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலியை 20 ஓவரில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் அவரது இடமும் கேள்வி குறியாகவே இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்