என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
முதல் வெற்றி மிகவும் முக்கியமானது- மும்பை கேப்டன் ரோகித்சர்மா மகிழ்ச்சி
- பவர் பிளே ஓவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டோம்.
- இஷான் கிஷன், திலக் சர்மா பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது. 173 ரன் இலக்கை ஆட்டத்தின் கடைசி பந்தில் எடுத்து மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது. 5 முறை சாம்பியனான அந்த அணி 2 தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்தது. டெல்லி அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை தழுவியது.
இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
போட்டியில் வெற்றி மிகவும் முக்கியமானது. முதல் போட்டியில் இருந்து அதே கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறோம். முதல் வெற்றியை பெற்றது. மிகவும் முக்கியமானது. சிறப்பானதாக உணர்கி றேன்.
174 ரன் இலக்கு எடுக்க கூடியதாகும். பவர் பிளே ஓவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டோம். இதன் காரணமாக தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தோம். இஷான் கிஷன், திலக் சர்மா பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிகளிலும் வெற்றிகளை நோக்கி காத்திருக்கிறோம்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்