search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அதிக நேரம் களத்தில் நின்றால் பழைய பார்மை நிச்சயம் மீட்டெடுப்பார்: கோலியை புகழ்ந்த ரவிசாஸ்திரி
    X

    அதிக நேரம் களத்தில் நின்றால் பழைய பார்மை நிச்சயம் மீட்டெடுப்பார்: கோலியை புகழ்ந்த ரவிசாஸ்திரி

    • டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
    • அதனால் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    பார்படாஸ்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:

    இது விராட் கோலியின் ஆட்டம் அல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்கப்போய் தனது விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

    ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    ரோகித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சிசெய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார்.

    அவர் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.

    தற்போது விராட் கோலிக்கு பேட்டிங் ரிதம் சரியாக அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார்.

    நீங்கள் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில், சிறிது பொறுமையாகக் காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

    Next Story
    ×