என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
டிஎன்பிஎல்: 87 ரன்களில் சுருண்டது சேலம் ஸ்பார்டன்ஸ்
Byமாலை மலர்21 July 2022 3:46 PM GMT
- சேலம் அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் சேர்த்தார்.
- திருச்சி அணி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த சேலம் அணி, அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. துவக்க வீரர் கோபிநாத் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார். அவர் 5 பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால் சேலம் அணி 19.5 ஓவர்களில் 87 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
திருச்சி தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதீக் ரஹ்மான் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X