search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி பெற 139 ரன்கள் இலக்கு
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி பெற 139 ரன்கள் இலக்கு

    • முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 138 ரன்கள் அடித்தது.
    • திண்டுக்கல் அணி வீரர் விவேக் 61 ரன்கள் குவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்று வரும் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் வைத்தியா 2 ரன்னுக்கும், நிஷாந்த் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார். ஹரிகரன் 6 ரன்னுக்கும் மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

    20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி களம் இறங்கி விளையாட உள்ளது.

    Next Story
    ×