என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி.என்.பி.எல்.கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி
- திண்டுக்கல் அணி வீரர் விவேக் 61 ரன்கள் குவித்தார்.
- சேப்பாக் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 44 ரன்கள் அடித்தார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் அடித்தது. அந்த அணி கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் அடித்தார்.
மணி பாரதி 37 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான கவுசிக் காந்தி 44 ரன்கள் குவித்தார். ஜெகதீசன் 31 ரன்கள் அடித்தார். பின்னர் சசிதேவ்-சோனுயாதவ் ஜோடி சேர்ந்தனர். சோனு 26 ரன்கள் அடித்தார். சசிதேவ் 15 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராஜகோபால் சதீஷ் 8 ரன்னுடன் வெளியேறினார். 9.2 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்