search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்து வீரர்கள் விமான டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தார்கள்: மேக்ஸ்வெல்
    X

    இங்கிலாந்து வீரர்கள் விமான டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தார்கள்: மேக்ஸ்வெல்

    • ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் சிக்க
    • ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைக்கான தொடக்க சுற்று ஆட்டம் நடைபெற்றது. "பி" பிரிவில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்று முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 19.4 ஓவரில்தான் இலக்கை எட்டியது. கடைசி ஓவர் வரை போட்டி சென்றது. இதனால் பரப்பான நிலை ஏற்பட்டது.

    இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விமானங்களில் டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தனர். அவர்களிடம் பீதி தொற்றியிருந்தது.

    கடைசி ஓவரின் 3-வது பந்தில் டிம் டேவிட் கேட்ச் தவற விட்டபோது இங்கிலாந்து வீரர்கள் அறையில் ஒருவிதமான பதட்டம் இருந்துள்ளது. கேட்ச் விட்டபின்னர் 2 பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றோம். அதை பார்க்க வேடிக்கயைாக இருந்திருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களிடம் இருந்து எனக்க சில தகவல் கிடைத்தது. அப்போது போட்டியில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. உண்மையிலேயே இங்கிலாந்து லீக் சுற்றோடு திருப்பி அனுப்பப் போகிறீர்களா? இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×